Saturday, April 1, 2017

மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!

எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....
எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்......
எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்....
எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்....
எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்....
எங்கடா என் மொழி என்று கேட்டேன்.....

கடைசியா பதிலைச்சொன்னான்.....

இதையெல்லாம் வித்து தான்.....

உங்களுக்கு அரிசி கொடுத்தோம்....

மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்....

மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்....

மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்....

மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்.....

கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்....

தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்...

அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்....

அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே ...!! என்றார்கள்....

யாரடா நீங்கள் ...? என்றேன்....

நாங்கள் தான் #அரசியல்வாதிகள்
என்றார்கள்.....!!

மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! 

♨இமெயிலை கண்டுபிடித்த தமிழர் தேர்தலில் போட்டி

இ–மெயிலை கண்டுபிடித்தவர் அமெரிக்க வாழ் தமிழர் சிவா ஐயாத்துரை. இவர் தற்போது அமெரிக்காவில் ‘சைட்டோசால்வ்’ என்ற நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட் சபைக்கு சில தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக சிவா ஐயாத்துரை அறிவித்துள்ளார்.

அங்கு தற்போது செனட் சபை உறுப்பினராக ஜனநாயக கட்சியின் எலிசபெத் வாரன் என்ற பெண் உள்ளார். அவர் இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் சிவா ஐயாத்துரை தெரிவித்துள்ளார்.
     இவர்நமது நாடார் சமுகத்தை
          சேர்ந்தவர் என்பது  பெருமைக்குரிய விடயம்மாகும்
                        ✍
       🏹*சத்திரியபாசறை*🏹

பிச்சைகாரன்: சார்

பிச்சைகாரன்: சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிஸ்னஸ் பார்ட்னரா...?"

ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம்  தேவையில்லை. அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின்  அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…. “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட  பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்… “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….

இது தான் நமது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறது.

இறைவன் தான் பிஸ்னஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

ஐம்புலன்களை நமக்கு கொடுத்து அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா? ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான். இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கும்.

இவ்வளவு தந்த அவனுக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன். நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக. நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

இறைவனை வணங்குவதோ, வேதங்களை படிப்பதோ, ஆலயத்துக்கு செல்வதோ, தொண்டு முதலானவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது சக மனிதர்களுக்கு உதவுவதோ – இவை யாவும் செய்வது நமக்காக தான். நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான். மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.

படித்ததில் பிடித்தது...

கேவலமான உண்மைகள்!!!!!!

1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40
லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது..!!

2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின்
விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால்
பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5
சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12
சதவிகிதம்..!!

4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு
வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும்,
தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக்
கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய
செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில்
பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச்
செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள்
மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட
கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும்
காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில்
விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc
இவையெல்லாம் செயற்கையான
ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகி
ன்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை
இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்)
தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும்
நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம்
விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று
கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து
வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை
மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை
சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே
மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து
விற்றால் வரி உண்டு..!!

10. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!
             
11.  வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,
சிலருக்கு படிக்கட்டாகவும்,
சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,
சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

12.   பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும்
ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

13.  தோற்றுப்போய் வீடு திரும்புகையில்,
தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும்,
வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

 14. முதியோர் இல்லத்திற்கு
பணம் கொடுங்க,
பொருள் கொடுங்க,
உணவு கொடுங்க,
உடை கொடுங்க..
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

15. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..

16.  டாக்டரை மறந்து விட்டு
நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும்
விசித்திரமான உலகம் இது.!

17. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,
ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

18. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,
பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.

19.  அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..
  இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...

20 .கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்..
மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.!                

21. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்..
ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

 21.  மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

 22.  ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான்,
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.

23.  ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க
சரிதான்..
ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க?

அறிவார்ந்த நண்பர்களே! இது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமாய் மனமுவந்து வேண்டுகின்றேன்!!!

Tuesday, March 7, 2017

கோயம்புத்தூர் பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று,,,

கோயம்புத்தூர் பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று,,,

அன்பார்ந்த பெற்றோர்களே!

உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.

எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

பரிச்சையில் வெற்றிபெறாத மாணவர்களில்..
ஒரு கலைஞன் இருப்பான்

அவனுக்கு கணிதம் தேவைப்படாது. அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான் அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.

ஒரு இசைஞானி இருப்பான் அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.

ஒரு விளையாட்டு வீரனிருப்பான் அவனது உடல் நலனே முக்கியமன்றி பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.

பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..

எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன என்று

தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.

அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.

நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.

உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.

என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.

வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.

மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.

உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.
படித்ததில் ரொம்ப ரொம்ப பிடித்தது

முதலில் வரியை ஒழுங்காக நடைமுறை படுத்துங்க

5 லட்சம் சம்பாதிக்கிறேன், 2.5 லட்சத்துக்கு வரி கட்ட சொல்லிரீங்க சரி கட்டிட்டேன்.

மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன்,

அதுல்லையும் பத்திர பதிவுன்னு 14% வாங்குரீங்க,

நகை வாங்க போறேன் அங்கேயும் வரி.

சாப்பிட போறேன் அங்கேயும் வரி.

மக்களை சாகடிச்சி புடுங்குரீங்க.

கார் வாங்கும்போதே வரியும் சேர்த்து புடுங்குரீங்க அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வசூலிக்கிரீங்க...

இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா!

நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பெனிக்கு லோன் கொடுப்பிங்க,                   கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பண்ணுவிங்கா!

கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் வரி பணத்த செலவழித்து விழா நடத்தி விருது கொடுப்பிங்க

லட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவேடிக்கை எடுத்ததிங்கனு கேட்ட புரியாத & புரிஞ்சுக்க முடியாதபடி ஒரு பதில் சொல்லுவிங்க,

இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா? பதுக்கத்தான் செய்வான்.

முதலில் சட்டத்தை மாற்றுங்க. எல்லா சிஸ்டத்தை மாற்றுங்க.

சில மாதங்கள் கழித்தும் அவன் பணத்தை டாலராக தங்கமாக சொத்தாக வாங்கத்தான் செய்வான்.

முதலில் வரியை ஒழுங்காக நடைமுறை படுத்துங்க                    இவண்....                                    தேசத்தை உண்மையாக நேசிக்கும் யதார்த்த  மனிதன்       🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳   

திருநெல்வேலி

இன்று....
திருநெல்வேலிக்கு 226 வது மலர்ந்த தினம். 1790ம் ஆண்டு இதே நாளில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது தான் திருநெல்வேலி.

திரு=மதிப்பு
நெல்=உணவு
வேலி=பாதுகாப்பு

திருநெல்வேலி பிரசித்தம் பெற்றது; ஏன் தெரியுமா?

10 சிறப்பம்சம்களை கொண்டது.

1) ஈரடுக்கு மேம்பாலம் பெற்ற முதல் இந்திய நகரம்

2) தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிவதலம் பெற்ற நகரம்

3) தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேரை கொண்ட மாநகரம்

4) நான்கு ரத வீதிகளில் இருந்து வளர ஆரம்பித்த நகரம்

5) ஐந்து வகையான நிலங்கள் பெற்ற தமிழகத்தின் ஒரே மாவட்டத்தின் தலைநகரம்

6) தமிழ்நாட்டின் ஆறாவது மிகப் பெரிய நகரம்

7) சரிகமபதநிச என்ற ஏழு
ஸ்வரங்கள் பாடும் இசைத்தூண்களை கொண்ட ஒரே நகரம்

8) தினசரி எட்டு லட்சம் மக்களால் இயங்கிக் கொண்டிருக்கும் பெருநகரம்

9) ஒன்பது கி.மீ சுற்றளவு கொண்ட மாநகரம்

10) தமிழகத்திலேயே அதிகமாக பத்து அணைகளை கொண்ட செழிப்பான மாவட்டம்
11)தமிழ்நாட்டில் தொன்றி தமிழ்நாட்டிலேயே முடியும் ஒரே நதி
தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென் தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும். இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.

தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத்தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லைத்தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை அண்ணாச்சி என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.

இது தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.

⚔பழகி பார் பாசம் தெரியும்...!

⚔பகைத்து பார் வீரம் தெரியும்...!

⚔நாங்க திருநெல்வேலிகாரங்க...!  

⚔சித்தர்களில் சிறந்த அகத்தியர் வளர்ந்த இடம் - திருநெல்வேலி

⚔காப்பியத்தின் மன்னன் தொல்காப்பியர் வளர்ந்த இடம் - திருநெல்வேலி

⚔வீரத்தின் அடையாளம் பாஞ்சாலங்குறிச்சி- திருநெல்வேலி

⚔தியாகத்தின் தியாகி வாஞ்சிநாதன் பிறந்த இடம் - திருநெல்வேலி

⚔முதன் சுதந்திரபோராட்ட வீரன், வீரத்தை முத்தமிட்ட மா மன்னன் பூலித்தேவர் (நெற்கட்டான் செவல்) - திருநெல்வேலி

⚔நாளிதழ்களின் அரசர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தது - திருநெல்வேலி

⚔கலைத்துறையின் singam ஹரி - திருநெல்வேலி

⚔ தமிழகத்தை அண்ணார்ந்து பார்க்க வைத்த நிகழ்ச்சி நீயா நானா இயக்குனர் மற்றும் தாயாரிப்பாளர் - திருநெல்வேலி

⚔ திருநெல்வேலிக்காரன் சாதிக்காத துறையும் இல்லை, கலையும் இல்லை

⚔தாகத்துக்கு தாமிரபரணி

⚔அருவிக்கு குற்றாலம்

⚔தென்றலுக்கு தென்காசி

⚔புலிக்கு களக்காடு&முண்டந்துறைவனவிலங்கு சரணாலயம்

⚔அழகுக்குக்கு சேரன்மகாதேவிகளக்காடு மலை

⚔படிப்புக்கு பாளையம்கோட்டை

⚔டேமுக்கு பாபநாசம்

ஆளை புடிக்க அல்வா
ஆளை முடிக்க அருவா

⚔தமிழுக்காக அன்றும் இன்றும் பாடுபடுவதில் திருநெல்வேலி ரத்தங்களுக்கு என்றும் பெரிய பங்கு உண்டு...

⚔ HCL, MGM, VGP,TVS சரவணா ஸ்டோர்ஸ் எல்லாம் திருநெல்வேலி....

நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!*🐬

🐬*1930- 1995 🐬வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!*🐬

💯தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்🐬

💯எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.🐬

💯கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.🐬

💯புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாகஇருந்ததில்லை.🐬

💯சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.🐬

💯பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.🐬

💯நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.🐬

💯தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.🐬

💯ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.🐬

💯அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.🐬

💯காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.🐬

💯சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.🐬

💯உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை
மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.🐬

💯எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்🐬

💯எங்கள்பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல🐬

💯அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.🐬

💯உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை🐬

💯எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.🐬

💯எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்🐬

💯வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.🐬

💯எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.🐬

💯உறவுகள் அருகில் இருந்து உள்ளமும் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை🐬

*💯நெஞ்சம் நிமிர்த்தி கூறுகிறேன் இப்படிப்பட்ட  பொன்னான  காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.🐬

🐬உங்கள் நண்பன் 🎭

Monday, March 6, 2017

😅 சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் 😅

😅 சிரித்து சிரித்து சின்னாபின்னமாகுங்கள் 😅
😅 ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....??? 😅😅😅
😅
😅 ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான் 😅😅😅
😅
😅 ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்.... 😅😅😅
😅 மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்... 😅😅😅
😅
😅 டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!! முதல் உதவி என்ன செஞ்சீங்க....??? 😅😅😅
😅 வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்....!!! 😅😅😅
😅
😅 கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???'' 😅😅😅
😅 டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்......??? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே....!!!'' 😅😅😅
😅
😅 "மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்....???" 😅😅😅
😅 "அது.... குருவி....!!!" 😅😅😅
😅
😅 ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே....??? உங்களுக்குத் தெரியுமா.....??? 😅😅😅
😅 நண்பர்: தெரியுமாவாவது....??? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன். 😅😅😅
😅
😅 பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை." 😅😅😅
😅 வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது." 😅😅😅
😅
😅 ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்...??? 😅😅😅
😅 ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு....??? 😅😅😅
😅
😅 (பரீட்சை ஹாலில்)
😅 ரகு : வயித்தைக் கலக்குதுடா.
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா...??? 😅😅😅
😅
😅 முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்...??? 😅😅😅
😅 ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்.....!!! 😅😅😅
😅
😅 வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்.....!!! 😅😅😅
😅 கடைக்காரர்: சாரி சார்....!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லியே...!!! 😅😅😅
😅
😅 இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான் 😅😅😅
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான் 😅😅😅
😅
😅 "கடலை எண்ணெய் என்ன விலைங்க...???" 😅😅😅
😅 "நூத்தி இருபது ரூவா"
😅 "எப்போ குறையும்?"
"அளந்து ஊத்தும்போதுதான்...." 😅😅😅
😅
😅
😅
😅😅😅😅😅😅😅சிரிங்க சிரிங்க  😅😅😅😅😅😅😅😅😅

இன்றைய தாங்கமுடியாத கடிகள்🌹🌹🌹🌹

ஒருவன் 2 நீச்சல் குளங்களை கட்டினான். ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான்.  ஏன்னு  கேட்டதற்கு...
அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா என்றான்😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

மாடு போல சின்னதா இருக்கும்...! ஆனா அது மாடு இல்ல...!

அது என்ன?

தெரியலையா?

அது கண்ணுக் குட்டி!

🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம்
என்னன்னு தெரியுமா...?

தெரியலையே.... என்னது?

தலையிலே முடி இருக்கிறது தான்...!😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.

செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!

கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க..!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?😄😄
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

ராத்திரியில சூரியன் எங்கே போகுது?...

எங்கேயும் போகல...., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை!.😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!

டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!
😜😜😜
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

சோப் டப்பாலே ஏன் சின்ன சின்ன ஓட்டையா போட்டுருக்காங்க?

ஏன்னா, பெரிய ஓட்டை போட்டா சோப் கீழ விழுந்துடும்!😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏

உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?

ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது.

😂😂😂😂😇😇😇😇😇
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியா படைச்சே?👔💥😎

🙎🏻🙎🏻🙎🏻 பெண்களே கவனமாக இருங்க!!!

பெண்களே உங்கள் மானம் காக்கப்பட வேண்டும். என்பதற்காகவே இந்த பதிவினை பகிருகிறோம்..!
உன்னை பெற்றவளும் ஒரு அம்மா அவளும் ஒரு பெண் என்று நினைத்துக்கொண்டு எங்கள் சகோதரிகளின் மானம் காக்க புறப்படுங்கள் நேயர்களே..!

மால்களில் டிரெஸ்சிங் ரூம்களில் இருக்கும் ஹேங்கரில் இருக்கும் நுண்ணிய போகஸ் கேமராதான் இது.
📸 📹 DRESSING ROOM-மில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு பெண்கள் படம் பிடிக்கபடுகின்றனர்..!

அதை தடுக்க ஒரு அருமையான ஆலோசனை.
TRIAL ROOM ல் உங்களோட செல்போன்ல இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள், 📱 உங்கள் போனில் இருந்து கால் பண்ண முடியவில்லை என்றால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்'.

காரணம் FIBER OPTIC SIGNAL செல்போன் சிக்னலை தடுக்க கூடியது..!

அப்படி கால் பண்ண முடியவில்லை என்றால்... உஷார்..!!!

இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க FRIENDS..! PLEASE SHARE ALL groiup....DONT MISS USE THIS MMS....thank BRO & SIS...BE CARE FULL....

நன்பர்களே! இப்ப கமெரா எங்கேயும் வைக்க முடியாது என்று தெரிஞ்சி இப்ப லைட்டுல வைக்க வந்துட்டார்கள்! நமது அக்கா, அம்மா , தங்கைகளை பாதுகாற்போம்! சிந்திகாமல் பாகிருங்கள்!

நட்சத்திர கிரிக்கெட்

அன்புள்ள
பெரியோர்களே
தாய்மார்களே

வரும் ஏப்ரல் 17ல் சென்னையில்

கமல்
ரஜினி
விஜய்
விக்ரம்
விஷால்

போன்ற 5 கோடி முதல் 50 கோடி
வரை மட்டுமே
கஷ்டப்பட்டு
உழைத்து
நடித்து

கூலி வாங்கி

அடுத்த வேலை உணவிற்கே

வழியில்லாமல்
அல்லாடும்

கஷ்ட ஜீவனத்தில்
வாழும் ஆதரவற்ற
கூலித்தொழிலாளிகளுக்கு

தற்போது ஒதுங்க நிழல் இன்றி
கொளுத்தும் வெய்யிலில் வாடும்
திக்கற்ற கலைஞர்களுக்கு

சங்கக் கட்டிடம் கட்ட

நிதி திரட்ட நடத்தப்படும் கிரிக்கெட்டை

கண்டு நிதியளிக்க

மாதம் 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பாதித்து

சென்னை மாநகர புஷ் பேக்
தகர
நரக
ரக ரக
பேருந்துகளில்
வலம் வந்து
வளம் நொந்து
மனம் வெந்து

சொகுசு வாழ்க்கை வாழும்

தமிழ்க்குடி மகன்களை

இளிச்ச வாயர்களை

டாஸ்மாக் நேயர்களை

பிறந்த குழந்தையை
பாலுக்கு அழ விட்டு விட்டு

பண்பாட்டு துரோகிகளுக்கு
பாலாபிஷேகம் செய்யும்
பண்ணாடைகளை

நம்பிக்கையோடு அழைக்கிறோம்.

வாருங்கள்
வந்து எங்கள்
பண்பட்ட விளையாட்டை
பணம் கொடுத்து பாருங்கள்

மனைவி மக்களை மறந்து
கூக்குரல் எழுப்பி
எம்மை உற்சாகப்படுத்த வாருங்கள்

300 ரூபாய் சம்பளம் வாங்கும் ரசிகனிடம் காசுபறிக்க பார்க்கும் நடிகர் சங்கம் 30 கோடி சம்பளம் வாங்கும் நடிகனிடம் பணம் கேட்க மறுப்பது ஏன் ?
.
விட்டால் இவர்கள் வீட்டு மளிகை சாமான்கள் வாங்குவதற்கு கூட ரசிகனிடம் பணம் கேட்பார்கள் போல ..

.
இதை புரிந்து கொண்ட நடிகர் அஜித் மக்களிடம் பணம் பறிக்காதீங்க சகநடிகர்களிடம் பணம் கேட்டு நடிகர் சங்க கடனை அடையுங்கள் கட்டிடம் கட்டுங்கள் .... தினமும் தன் குடும்ப செலவுக்காக சம்பாதிக்கும் மக்களிடம் பணம் பறிப்பது முட்டாள் தனம் என்று தான் நடிகர் சங்கம் நடத்தும் கிரிக்கட் போட்டியை புறக்கனிக்கின்றார் ..

.
ஒரு நடிகரே நமக்காக நடிகர் சங்கத்தை புறக்கனிக்க மக்களாகிய நாம் ஏன் அந்த கொள்ளையை புறக்கனிக்க கூடாது ..
ஆம் யாரும் நேரில் சென்று அந்த கிரிக்கெட் போட்டியை காணவேன்டாம் ரஜினி கமல்ஹாசன் விஜய் சூர்யா விக்ரம் சிம்பு தனுஷ் இவர்களிடம் இல்லாத பணமா நம்மிடம் இருக்கின்றது ??.
.
இதை இப்பவே தடுத்தால்தான் அவர்கள் அடுத்து கக்கூஸ் கட்டவதெற்காலாம் நம்மை நாட மாட்டார்கள் .. 100 ரூபாய் கொடுத்து படம் தான் பார்க்க முடியும் ரசிகனால் ...
.
சென்னை கடலூர் வெள்ளத்தில் மூழ்கிய போது இந்த நடிகர் சங்கம் என்ன செய்தது ??
.
சிந்தியுங்கள் இந்த கருத்து பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள் .. புறக்கணிப்போம் நட்சத்திர கிரிக்கெட்டை####

தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி என்று வைத்துக்கொள்வோம்.

# மாதம்  70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

# மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

# மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசுஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

#நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும்.

#ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

# திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.

# படப்பிடிப்புதளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கைகடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது.வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல்உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.

# இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.

# ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய்சம்பாதித்து10 கோடி வரிஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள்வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.

# பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள்கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான்.

# நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.

நிற்க.
மேற்கூறிய இந்த ஏழைகளின் நடிகர்சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைக்க போகிறார்களாம்.

### புயல் வெள்ளத்தில்நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்றபோது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்றுவெளிப்படையாக சொன்ன இவர்கள் தற்போது நம்மிடம் கிரிக்கெட் மூலமாக வசூல் என்ற பவருகிறார்கள்.

ஆகையால் மானமுள்ள நம் மக்கள் இந்த நட்சத்திரகிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க வேண்டும்.

### இந்த  அரசியல்வாதிகளிடம் ஏமாறுகிறோம். இந்த கூத்தாடிகளிடமும் ஏமாற வேண்டுமா#####

Wife - Tv மாதிரி

ife - Tv மாதிரி
Girl frd - mobile மாதிரி
வீட்டுல இருக்கும் போது TV use பண்ணுங்க,
வெளியே போகும்போது mobile use பண்ணுங்க,

Tv உங்களுக்கு சில நேரம்தான் புடிக்கும், ஆனா mobile எப்பவுமே புடிக்கும்,

TV free யா use பண்ணிக்கலாம், ஆனா mobile charger போடலைன்னா,,,
top up
பண்ணலைன்னா,,,
அவ்வளவுதான் ,

TV பெரிசா , பல்லக்காட்டும். பழச இருக்கும் ,,,ஆனா mobile அழகா slim மா இருக்கும் ,

TV க்கு பராமரிப்பு செலவு கம்மியா இருக்கும் , ஆனா mobile க்கு அப்படி கிடையாது ,உங்க பர்ஸூக்கு சாவுமணி அடிக்காம விடாது ,

TV க்கு remote இருக்கும் ,
ஆனா mobile க்கு கிடையாது ,,,,

முக்கியமா mobile க்கு 2 வகையான uses இருக்கும் , ஒன்னு நீங்க பேசலாம் ,,,,மற்றொன்று கேட்கலாம் !

ஆனா TV யில் நீங்க பேச முடியாது அது சொல்றததான் கேட்கோனும்,,,!

கடைசியா ஒன்னே ஒன்று ,,,,

TV யில virus கிடையாது ,,,,
ஆனா mobile யில virus உண்டு,,,,

so be careful😜

உருகி உருகி நான்

உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது

நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா?

கடவுள் : தாராளமாக கேள்

நான் : பொறுமையா கோபப்படாமல் பதில் சொல்வீர்களா?

கடவுள் : சத்தியமாக!

நான் : இன்னைக்கு ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளை கொடுத்தீங்க?

கடவுள் : என்னப்பா சொல்ற நீ?

நான் : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட் !

கடவுள் : ஆமாம்! அவசரத்துல என்னை கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டாய்.

நான் : கிளம்பினதே லேட் இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது.

கடவுள் : ஆமாம் எனக்கு தெரியும்.

நான் : சரி! பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு ஒரு மணிநேரம் லேட்.

கடவுள் : ஆமாம்! தெரியும்.

நான் : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆகிடிச்சு அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிடுச்சு கடைசீயில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.

கடவுள் : ஆமாம் அதுவும் தெரியும்.

நான் : வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர் கிட்டே ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர் கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.

கடவுள் : ஆமாம் தெரியும்.

நான் : அதை பிடிச்சி! இதை பிடிச்சி! முட்டி மோதி வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் ஆகி வேலை செய்யல

இன்னைக்கு எனக்கு எதுவுமே சரியில்லையே ஒரு நாள் உங்களை கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா?

(கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து! பேச ஆரம்பிக்கிறார்)

கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின் படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.

நான் : (அதிர்ச்சியுடன்) ஓ

கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா! நீ ஆபீஸ் போகும்போது நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்.

நான் : (அடக்கத்துடன்) ஓ

கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம் கடைசீயா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு! யாரும் அதை கவனிக்கல அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாகியிருக்கும்?

நான் : (கண்கலங்கியபடி) ம்ம்

கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்கு காரணம்! அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி உன் ஃபோனை செயலிழக்கச் செய்துவிட்டேன்.

நான் : ம்ம்

கடவுள் : அப்புறம் அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிச்சை தொட்டிருந்தால் அந்த கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய், ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.

என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.

நான் : இப்போ புரிகிறது இறைவா! என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும். இது புரியாமல் உங்களை ரொம்பவும் நிந்தித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.

கடவுள் : மன்னிப்பு கேட்காதே! என்னை நம்பு, எப்போதும் எந்த சூழ்நிலையிலும். அது போதும்!

நான் : நிச்சயமாக

கடவுள் : நீ திட்டமிடுவதை விட உனக்காக நான் திட்டமிடுவது எப்போதும் சரியாகவே இருக்கும்.

நான் : இனி நிச்சயம் உங்களை சந்தேகப்படமாட்டேன். உங்கள் அருளை சந்தேகப்படமட்டேன். கண்ணை இமை காப்பது போல ஒவ்வொரு கணமும் நீங்கள் என்னை காப்பதை புரிந்துகொண்டேன்.

கடவுள் : என்னை நம்பியிருப்பவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை ! 

அடுத்த தலைமுறைக்காகவும்

நமக்காகவும்
நம் அடுத்த தலைமுறைக்காகவும்
விவசாயிகளுக்காகவும்
விவசாயம் பெருகவும்
நம் உடல்நலத்திற்காகவும்
விதேஷிகளை விடுத்து
சுயசார்பில் வாழவும்
நாம் சில நல்முடிவுகளை எடுக்கலாமே!!!

பன்னாட்டு குளிர் பானங்களை தவிர்த்து இளநீரும் கரும்பு சாரும் பானகமும் அருந்தலாமே!

லேசும் குர்குரேவையும் விடுத்து, பொரி, கடலை & எள் உருண்டைகளையும் குழந்தைகளுக்கு தரலாமே!!

பெரிய மால்களில் காய்கறி வாங்குவதற்கு பதில் நாட்டு காய்கறிகளை சிறு விவசாயிகளிடம் நேரிடையாக வாங்கலாமே!!

பட்டினை தவிர்த்து கைத்தறி துணிகளை அணியலாமே!!

பிஸ்ஸா & பர்கரை விட்டொழித்து குறைந்தது மாதம் இருமுறையேனும் களி, கூழ், அப்பம், ஆப்பம் & பணியாரம் குழந்தைகளுக்கு செய்து தரலாமே!!!

சர்க்கரை தவிர்த்து வெல்லம் பனை வெல்லம் உபயோகிக்கலாமே!!!

2017 ல் விவசாயம் காத்து
விவசாயிகளை காத்து
நம்மை காப்பாற்றிக் கொள்வோம்!!!

மருத்துவமனைகளின் மறுபக்கம்

இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்

தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில்,  இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.

ஆம்.  மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் இரண்டு மருத்துவர்கள் மூலம். மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே,  “ Dissenting Diagonisis" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

நோயாளிகளின் நலன் அல்ல, பங்குதாரர்களின் நலனே முக்கியம்:

' மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா, குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது'  என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக் கொள்ளும் இந்த தருணத்தில், இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, “ இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின் நலன்காக இயங்குவதை விட,  அதன் பங்குதாரர்களின் நலனுக்காகதான் இயங்குகின்றன” என்பதுதான். இவர்கள் எந்த குற்றச்சாட்டையும் மேம்போக்காக கூறவில்லை. பாதிக்கப்பட்ட நோயாளிகள், நேர்மையான மருத்துவர்களின் வாக்குமூலங்களை கொண்டே பதிவு செய்திருக்கிறார்கள்.

நம் அனைவருக்கும் ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். அதாவது தேவையற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்று. இது குறித்து இந்த மருத்துவர்கள், “ பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை மட்டும் பதம் பார்க்கவில்லை. பரிசோதனை சாலைகள், நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும் ரத்த மாதிரிகளை உண்மையாக பரிசோதிப்பதே இல்லை. மருத்துவர்கள் எது மாதிரியான அறிக்கையை விரும்புகிறார்களோ... அதைதான் இவர்கள் தயார் செய்து தருகிறார்கள்” என்கிறார். இப்போது உங்கள் சொந்த அனுபவங்களை இந்த வாக்கியத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

பெரும் மருத்துவமனைகள், இலாப இலக்கு நிர்ணயத்துக் கொண்டு வேலை செய்கின்றன. அவர்களுக்கு எப்போதும் அப்பாவி நோயாளிகளின் நலன் முக்கியமே இல்லை... லாபம்.. லாபம்... லாபம்... மேலும் லாபம் மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

நியாயமான மருத்துவர்களை உதாசீனம் செய்யும் மருத்துவமனைகள்:

ஒரு பிரபலமான மருத்துவமனை,  தன் மருத்துவமனையில் வேலை பார்த்த சிறந்த சிறுநீரக சிறப்பு மருத்துவரை பணி நீக்கம் செய்தது. அதற்கான காரணம், ஒரு நோயாளிக்கு அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை சிகிச்சையை செய்யாமல், சாதாரண சிகிச்சை மூலம் குணப்படுத்தியது.  " இது கார்ப்பரேட் மருத்துமனைகள் எவ்வளவு வக்கிர மனநிலையில் செயல்படுகிறது என்பதற்கான  சான்று" என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

“லாபத்தை முதன்மையான நோக்கம் கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. அவர்களுக்கு நோயாளிகளின் நலன் முக்கியம் அல்ல. லாபத்திற்காக தேவையற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை தன்னை நம்பி வரும் நோயளிக்கு அளிக்கின்றன” என்று வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

சுக்லே, “ எனக்கு தெரிந்த ஒருவர்,  தனக்கு சொந்தமான வீட்டை விற்று, தன் மனைவிக்கான மருத்துவ கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை கட்டினார். ஆனால், உண்மையில் அந்த சிகிச்சைக்கு அவ்வளவு கட்டணமெல்லாம் இல்லை...” என்கிறார்.

இதைதாண்டி இவர்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு பகீரென்று இருக்கிறது. சில மருத்துவமனைகள் உண்மையில் அறுவை சிகிச்சையே செய்யாமல், வெறும் மயக்க மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்துவிட்டோமென்று பணம் பறிக்கிறார்கள்

கொல்கத்தாவை சேர்ந்த புண்யபிரதா கூன்  என்னும் மருத்துவர், “ எங்கள் பகுதியில் மருத்துவர்களுக்கு நியாயமாக மருத்துவம் பார்த்தும் ஈட்டும் தொகையை விட, ஆய்வு மையங்கள் அளிக்கும் பங்கு தொகை அதிகம்.  x-ray எடுக்க பரிந்துரைத்தால் 25 சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தால் 33 சதவீதமும் கமிஷன் தருகிறார்கள்...” என்று தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

" தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, தங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்ள தான் பல மருத்துவமனைகள் விரும்புகின்றன. அதாவது தேவையற்ற அறுவை சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து, நோயாளிகளை மீண்டும் மீண்டும் திரும்ப வரவைக்க வேண்டும். அதை மருத்துவர்கள் செய்ய தவறும் போது, அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்" என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது.

இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது...?

 என்ற நம் கேள்விக்கு இந்த மருத்துவர்களின் பதில், “ பெரும் மருத்துவமனைகள் மருத்துவதுறையை திட்டமிட்டு கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை மெளனமாக இந்திய மருத்துவக் கவுன்சில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. உடனடியாக மருத்துவக் கவுன்சில் தன்னை புதுப்பித்துக் கொண்டு, இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள் இந்த இரு மருத்துவர்களும்.

இந்திய மருத்துவ துறையின் இன்றைய வணிக மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது 2020 ம் ஆண்டு 280 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கப்போகிறது என்கிற விபரங்களே, இதில் உள்ள அரசியலையும், அக்கிரமங்களையும் நமக்கு உணர்த்துகிறது.

இவர்களின் குற்றச்சாட்டுகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்திய சுகாதாரத் துறை...?

கடி கடி கடி 👊👊�

ஓடுற எலி வால புடிச்சா "கிங்கு"
தூங்குற  புலி வால புடிச்சா "சங்கு"

மேல இருந்து கீழ விழுந்தா அது "அருவி"
கீழ இருந்து மேல போனா அது "குருவி"

மின்னல பார்த்தா கண்ணு போய்டும்
பார்கலேன்னா மின்னல் போய்டும்

‘சிற்பி’ உளிய அடிச்சா அது கலை
சிற்பிய  உளியால அடிச்சா அது கொலை

இருமல் வந்தா இருமமுடியும்..
ஆனால் காய்ச்சல் வந்தா காய்ச்ச முடியுமா?

டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனால் அது சினிமா தியேட்டர்
உள்ள போயிட்டு டிக்கெட் வாங்குனா அது ஆப்பரேஷன் தியேட்டர்

விஸ்கி குடிச்சா நாம நாலுபேருக்கு முன்னாடி ஆடலாம்..
அதுவே அதிகமா குடிச்சா நம்ம முன்னாடி நாலு பேரு ஆடுவாங்க..

வாழ்கையில ஒண்ணுமே இல்லைனா போரடிக்கும்
மண்டமேல ஒண்ணுமே இல்லைனா  க்கிளாறடிக்கும்

நீங்க எவ்வளவுதான் பெரிய பருப்பா இருந்தாலும்..
அத வெச்சு சாம்பார் செய்ய முடியாது

டீ மாஸ்டர் எவ்வளவு தான் 'லைட்' டீ போட்டாலும்
அதுல இருந்து கொஞ்சம்கூட வெளிச்சம் வராது

எட்டு செக்கண்டுல 1140 பெயர்  சொல்ல முடியுமா?
நான் சொல்லுவேன்..
கண் 1000
100 ஜஹான்
10 டுல்கர்
9 தாரா
7 மலை
6 முகம்
5 சலி
3 ஷா

A,B, க்கு போரடிச்சா என்ன செய்யும்  CD போட்டு பாக்கும்
E,F, க்கு உடம்பு சரியில்லைனா எங்கே போகும்? GH க்கு போகும்
I,J,K,L  க்கு வில்லன் யாரு  MN தான்
O,P ரேசன் கடைக்கு போனா Q லதான் நிக்கும்
R,S, க்கு தலை வலிச்சா T குடிக்கும்
U,V,W,X,Y, க்கு பறக்கனும்னா Z (JET AIRWAYS) லதான் போகும்

முட்டையிடாத பறவை?  ஆண் பறவை!

கோழி ஏன் முட்டை போடுது? ஏன்னா அதுக்கு 1 2 3 போடத்தெரியாது.

ஊசி குத்தினா ஏன் ரத்தம் வருது? தன்னை குத்தினது யாருன்னு பாக்கவருது

Finally....

*என்னதான் ஊருக்கே கேக்குறமாதிரி குறட்டை  விட்டாலும்
அத நம்ம காதால கேட்க முடியாது!                        

கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!

கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!
**.) கோல்கேட் பற்பசையில் பல் துலக்கி
**.) கில்லெட் ரேசரில் சவரம் செய்து
**.) ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூவும் லக்ஸ் சோப்பும் போட்டு குளித்து
**.) ஓல்ட் ஸ்பைஸ் வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
**.) ஜாக்கி ஜட்டியையும் , க்ரூசோ பனியனையும்
**.) பீட்டர் இங்க்லெண்ட் சட்டையையும் , ஆக்சம்பர்க் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு
**.) மேகி நூடுல்சை சாப்பிட்டு,
நெஸ்கபே காபியை குடித்துவிட்டு
**.) ரீபோக் ஷூவை மாட்டிக்கொண்டு,
**.) சாம்சங் போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
ரேபான் கண்ணாடியையை அணிந்து,
**.) வெஸ்டார் வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
**.) ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே, கொக்கோ கோலா அருந்தி
**.) மெக்டோனல்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு
**.) மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு கே எப் சி பர்கரும்,
**.) குழந்தைகளுக்கு டோமினோ பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்..
"இந்தியன் ரூபா மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சின்னு???"
*கேட்டான் பார் ஒரு கேள்வி*        *" மேற்கூறிய அனைத்தையும் புறக்கணித்துப் பாருங்கள் நண்பரே............ தன்னாலே ஏறும் ரூபாயின் மதிப்பு.  Pl. Share to all for awareness.
 இவைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு,தமிழ் பண்பாடு,கலாச்சாரம் என்று பேசினால் நன்றாக,உண்மையாக இருக்கும்.

முகம் பார்க்கும் கண்ணாடி

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர்.
📄📄📄📄📄📄📄📄📄📄📄
நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.

அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.

சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.
🔍🔎🔍🔎🔍🔎🔍🔎🔍🔎🔍
அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
👍👍👍👍👍👍👍👍👍👍👍
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.

”The world is like a mirror”, it gives back to anyone the reflection of the thoughts in which one has strongly believed.

ஒவ்வொருவர் முன்னேற்றத்துக்கும் அவர்கள் தன்னம்பிக்கையே காரணம்...உன்னை தவிர உன் முன்னேற்றத்தை தடுக்க யாராலும் முடியாது..

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை

வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை:
நீல் ஆம்ஸ்ட்ராங்...
இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...
ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?...
பல பேருக்கு தெரியாது...
அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...
இவர் தான் நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து,"பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...
"‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...
தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை...
சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்...
அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..."
நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...
உலக வரலாறு ஆனார்...
உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது...
திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...
இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...
(ச.க.ம.)
நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான்.நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...
பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...
தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...
அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...
ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...
சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம்...
எனவே, நல்ல விஷயங்களில்...
தயக்கத்தை தவிர்ப்போம்...
தலைநிமிர்ந்து நிர்ப்போம்.
நன்றி.

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!!! Let's Spread Aathisoodi to the World!!!

1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /
2. Control anger.
3. இயல்வது கரவேல் /
3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் /
4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /
5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /
6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் /
7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /
8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் /
13. Don't shortchange.
14. கண்டொன்று
சொல்லேல்/
14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.
16. சனி நீராடு /
16. Shower regularly.
17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.
21. நன்றி மறவேல் /
21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் /
23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் /
25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் /
27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.
29. இளமையில் கல் /
29. Learn when young.
30. அரனை மறவேல் /
30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற /
32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் /
37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.
39. கேள்வி முயல் /
39. Learn from the learned.
40. கைவினை கரவேல் /
40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் /
41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.
43. கெளவை அகற்று /
43. Don't vilify.
44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /
48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் /
49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /
53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /
54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.
56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.
58. தீவினை அகற்று /
58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /
61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /
63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் /
64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் /
65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /
68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் /
69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /
70. Don't over snack.
71. நூல் பல கல் /
71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /
74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் /
75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /
80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /
85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /
87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் /
88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /
90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் /
91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /
92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.
98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் /
99. Don't self praise.
100. வாது முற்கூறேல் /
100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு /
101. Long to learn.
102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /
105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/
106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement.

- ஔவையார் / Avvaiyaar...

தாய் பாசம் உள்ளவர்களுக்கு இந்த கவிதை வலி புரியும்

அம்மா...
நான் பிறந்து
விழுந்த போது...
உன் சேலைதான்
ஈரமானது...

நான் உறங்க...
உன் சேலைதான்
ஊஞ்சல் ஆனது..
.
நான் பால்
அருந்தும் போது...
உதட்டினை துடைத்து
உன் சேலை தான்...

எனக்கு பால்
கொடுக்கும்போது...
உன் சேலை தான்
எனக்கு திரையானது...

நான் மழையில்
நனையாமல் இருக்க...
உன் சேலை
தான் குடையானது...

நீச்சல் பழக...
என் இடுப்பில் கட்டியதும்
உன் சேலை தான்...

மழையில் நனைந்த
என் தலையை...
துவட்டியதும்
உன் சேலை தான்...

மாம் பழம் தின்று
என் கை துடைத்தும்
உன் சேலை தானம்மா...

ஆசிரியரின்
மிரட்டலுக்கு...
ஓடி ஒளிந்ததும்
உன் சேலைதான்...

அப்பா அடிக்க
வரும் போது...
என்னை ஒலித்து
வைத்ததும்...
உன் சேலை
தானம்மா...

அண்ணனுக்கு தெரியாமல்
மறைத்து வைத்து...
மிட்டாய் கொடுத்தும்
உன் சேலை தான்...

காசு எடுத்தால் என்னை
கட்டி வைத்து அடித்ததும்...
உன் சேலை தான்...

தலை வழிக்கு ஒத்தடம்
கொடுத்தும்...
உன் சேலை
தான் அம்மா...

அம்மா உன் சேலையை
தொட்டு பார்கிறேன்...

தொலைந்த இன்பத்தை
உன் கண்ணில் பார்கிறேன்...

மறு பிறவியிலும்
நீயே வேண்டுமென்று...
இறைவனிடம் கேட்கிறேன்
அம்மாவாக.....       அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!

அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாடா என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் கலங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!!

எனக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!!
பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!!

இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..
மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,
அத்தி பூக்கும் தருணமாய்..!

என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..
இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!
என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

தொலைபேசியில்...
உனக்காக, தேடி திரிந்து பார்த்து,
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..!

கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்
என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...
கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...
எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
"மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"ரோட்ல பத்திரமா பாத்து போடா"
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..?
இல்லை..
உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?
தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!!

உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்
அம்மா என்றும் உந்தன்
காலடியில்...!

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?


1.)தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்.
எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.

இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில்
சாப்பிடவேண்டும்.


2.)வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து
சாப்பிடக்கூடாது. வாழைப்பழம்
சாப்பிட்ட உடனும், தயிர், மோர்  சாப்பிடக்கூடாது.



3.)பழங்களைத் தனியேதான் சாப்பிடவேண்டும்.
சாப்பாட்டுடன் சேர்ந்து
சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.


4.வெண்ணெயுடன்
காய்கறிகளைச் சேர்த்துச்
சாப்பிடக்கூடாது.


5.) மீன், கருவாடு சாப்பிட்ட உடன்  பால், தயிர் சாப்பிடக்கூடாது.
அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு
உள்ளது.


6.)உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசிசாதம் சாப்பிட வேண்டும்.

7.)உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு
உண்பது நல்லது.

8.)ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய்,
முள்ளங்கி ஆகியவற்றைச்
சாப்பிடக்கூடாது.

9.)மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிககாரம், மாமிச உணவு
ஆகியவற்றை உண்ணக்கூடாது.

10.)நெய்யை வெண்கலப்
பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

11.)காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது.
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக்
குடிக்கலாம்.

12.)அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய்,
ஊறுகாய் ஆகியவற்றைச்
சேர்த்துக்கொள்ளக்கூடாது.

13.)பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள்,அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச்
சேர்த்து கொள்ளக்கூடாது.

14.)தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய்,
புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு,
அதிக காரம், அதிக புளிப்பு,
கொத்தவரங்காய், பீன்ஸ்
ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.


15.)கோதுமையை நல்லெண்ணெயுடன்
சமைத்துச் சாப்பிடக்கூடாது.
இந்த செய்தி உங்களுக்கு
பிடித்திருந்தால்   பகிர்ந்து நன்மை செய்யுங்கள்.
மிகவும் நன்றி.

யோசித்தாயா நண்பா

🔻 யோசித்தாயா நண்பா

🔻 பெட்ரோல் விலை உலக நாடுகளில் 🔻 பாகிஸ்தான் - ரூ26
🔻 பங்களாதேஷ் -ரூ22
🔻 கியூபா- ரூ 19
🔻 இத்தாலி- ரூ14
🔻 நேபாளி-ரூ34
🔻 பர்மா-ரூ30
🔻 ஆப்கானிஸ்தான்-ரூ36
🔻 ஸ்ரீலங்கா-ரூ34
🔻 ஆனால்

🔹 இந்தியாவில் -ரூ68

🔻 அடிப்படை விலை லிட்டருக்கு-16.50
 🔻 மத்திய வரி-11.80
🔻 கலால் வரி-11.80
🔻 செஸ் வரி-4.00
🔻 மாநில வரி-8.00
🔻 ஆக ரூபாய் 50.05 + 18.00 மொத்தம் = 68ரூபாய்

🔹 இந்த 18.00ருபாய் யாருக்கு எங்கே போகிறதோ

🔹 முகேஷ் அம்பானியின் கனவு வீடு (ஏழு வருடங்களாக கட்டி முடிக்கப்பட்டது)

🔻 4லட்சம் சதுரடியில்
🔻 27மாடிகளாக
🔻 9 லிஃப்ட் வசதிகளுடன்
🔻 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம்
🔻 1 ஆடம்பர சினிமா தியேட்டர்
🔻 1 ஆடம்பர உடற்பயிற்சி கூடம்
🔻 1 பூங்கா
🔻 160 கார் பார்க்கிங்
🔻 600 அறைகள்
🔻 600 வேலையாட்கள்
🔻 உலகத்திலயே மிகப்பெரிய மிகவும் வசதி படைத்த மிகுந்த பண, பொருட்செலவில் உருவான தனி நபர் வீடு

🔹 மொத்த விலை 4700கோடி மட்டுமே

🔹 கடந்த மாதம் தான் தனது குடும்பத்துடன் குடியேறினார்

🔹 முதல் மாத மின்கட்டணம் வெறும் 71லட்சம் மட்டுமே

🔹 நம்ப முடியாத இந்தியா

🔹 அதிசயமான இந்தியா

🔹 இதுதான் எனது தேசம்

🔻 ஆம்புலன்ஸ்க்கு முன்பே பீட்ஸா வீடு தேடி வரும்
🔹 , நம்ப முடியாத இந்தியா,!!!


🔻 வாகன கடன் 7%
🔹 கல்விக்கடன் 12%
🔹 நம்ப முடியாத இந்தியா,!!!

🔻 அரிசி கிலோ 4000ருபாய்க்கு கிடைக்கும்
ஆனால்
🔹 சிம்கார்டு ப்ரீ
🔹 நம்ப முடியாத இந்தியா,!!!

🔻 துர்கா பூஜை செய்த இதே நாட்ல தான் பெண்சிசு கொலையும் நடக்குது
🔹 நம்ப முடியாத இந்தியா,!!!

🔻 ஒலிம்பிக்கில் செயிச்சு மெடல் வாங்குனா அரசாங்கம் 3கோடி ரூபாய் கொடுகும்
ஆனால்
🔹 எல்லையில் சண்ட போட்டு செத்துட்ட 1லட்சம் ஒரே ஒரு லட்சம்  தான்
🔹 நம்ப முடியாத இந்தியா,!!!!

🔹 இது முற்றிலும் உண்மை

குபீர்னு சிரிச்சுட்டேன்

😄😄😄😄குபீர்னு சிரிச்சுட்டேன்😄😄😄😄

தியேட்டரில் படம் ஆரம்பித்து ஓடிக்கொண்டிருக்கிறது........

நம்மாளு பக்கத்தில் ஒரு வயதான மூதாட்டி தான் கொண்டு வந்திருந்த குளிர்பானத்தை 20 நிமிடத்திற்கு ஒரு தடவை என, சிறிது சிறிதாக குடிப்பதை பார்த்து, எரிச்சலடைந்த நம்மாளு பாட்டியிடமிருந்து குளிர்பானத்தை பிடுங்கி, மடக்...மடக்.. என ஒரே மூச்சில் குடித்துவிட்டு....

நம்மாளு : பாட்டி கூல்டிரிங்க்சுன்னா இப்படி குடிக்கணும்...தெரியுதுங்களா....

பாட்டி : அடப்பாவி மவனே....அவசரப்பட்டியேடா....

நம்மாளு : ஏன்? என்ன..?

பாட்டி : அதுலதான் நான் வெத்தலைய துப்பிகிட்டு இருந்தேன் இவ்ளோ நேரம்..!

😂😂😂😂😄😄😄😄