Saturday, April 1, 2017

மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!

எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....
எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்......
எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்....
எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்....
எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்....
எங்கடா என் மொழி என்று கேட்டேன்.....

கடைசியா பதிலைச்சொன்னான்.....

இதையெல்லாம் வித்து தான்.....

உங்களுக்கு அரிசி கொடுத்தோம்....

மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்....

மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்....

மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்....

மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்.....

கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்....

தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்...

அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்....

அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே ...!! என்றார்கள்....

யாரடா நீங்கள் ...? என்றேன்....

நாங்கள் தான் #அரசியல்வாதிகள்
என்றார்கள்.....!!

மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! 

No comments:

Post a Comment