Monday, March 6, 2017

அடுத்த தலைமுறைக்காகவும்

நமக்காகவும்
நம் அடுத்த தலைமுறைக்காகவும்
விவசாயிகளுக்காகவும்
விவசாயம் பெருகவும்
நம் உடல்நலத்திற்காகவும்
விதேஷிகளை விடுத்து
சுயசார்பில் வாழவும்
நாம் சில நல்முடிவுகளை எடுக்கலாமே!!!

பன்னாட்டு குளிர் பானங்களை தவிர்த்து இளநீரும் கரும்பு சாரும் பானகமும் அருந்தலாமே!

லேசும் குர்குரேவையும் விடுத்து, பொரி, கடலை & எள் உருண்டைகளையும் குழந்தைகளுக்கு தரலாமே!!

பெரிய மால்களில் காய்கறி வாங்குவதற்கு பதில் நாட்டு காய்கறிகளை சிறு விவசாயிகளிடம் நேரிடையாக வாங்கலாமே!!

பட்டினை தவிர்த்து கைத்தறி துணிகளை அணியலாமே!!

பிஸ்ஸா & பர்கரை விட்டொழித்து குறைந்தது மாதம் இருமுறையேனும் களி, கூழ், அப்பம், ஆப்பம் & பணியாரம் குழந்தைகளுக்கு செய்து தரலாமே!!!

சர்க்கரை தவிர்த்து வெல்லம் பனை வெல்லம் உபயோகிக்கலாமே!!!

2017 ல் விவசாயம் காத்து
விவசாயிகளை காத்து
நம்மை காப்பாற்றிக் கொள்வோம்!!!

No comments:

Post a Comment